கை ஓங்கி இருக்கும்… அதிமுகவில் கலகம் ஏற்படும்… அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்!- சசிகலா குறித்து பிரபல ஜோதிடர் என்ன சொல்கிறார்?

 

கை ஓங்கி இருக்கும்… அதிமுகவில் கலகம் ஏற்படும்… அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்!- சசிகலா குறித்து பிரபல ஜோதிடர் என்ன சொல்கிறார்?

“சசிகலாவின் வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமோ என்னவோ தெரியாது. ஆனால், அதிமுகவில் கலகலத்தை உண்டுபண்ணும் என்பது உறுதி” என்கிறார் பிரபல ஜோதிடர் ஷத்குரு.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட இவர்களின் தண்டனை வரும் இந்த மாதம் முடிவடைகிறது. அதே நேரத்தில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 100 கோடி ரூபாய் இன்னும் கட்டப்படவில்லை. அவர்கள் அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் சிறையில் இருக்க விரும்பப்பட மாட்டார். அபராத தொகையை கட்சியினரே செலுத்திவிடுவார்கள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

“சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அரசியலில் மட்டுமின்றி அதிமுகவிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா கடும் கோபத்தில் இருக்கிறார். அவரை அதிமுகவில் இருந்தே அகற்றிவிடும் வேலையில் அவர் ஈடுவார். ஓபிஎஸை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அம்மா மக்கள் கட்சியை கலைப்பது அவரது விருப்பம். இதே நேரத்தில் அதிமுகவை கைப்பற்றும் வேலையில் அவர் தீவிரம் காட்ட உள்ளார். சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் பல அமைச்சர்கள் அவர்களை சந்திக்க உள்ளனர். அவரால் பல அமைச்சர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர். தற்போது, எடப்பாடிக்கு விசுவாசமாக இருந்தாலும், சசிகலா வந்தவுடன் இவர்களின் எண்ணம் மாறிவிடும். எடப்பாடியால் சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றும் செய்யமுடியாது. யாரை நம்பி மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்கள். இதனால், சசிகலாவிடம் அதிமுகவினர் சரணடைய வாய்ப்பு உள்ளது” என்று அடித்துச் சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கை ஓங்கி இருக்கும்… அதிமுகவில் கலகம் ஏற்படும்… அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்!- சசிகலா குறித்து பிரபல ஜோதிடர் என்ன சொல்கிறார்?இதனிடையே, “விரைவில் நடக்க உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் சசிகலா கை காட்டும் ஆட்களே ஆட்சி அதிகாரத்தில் அமர அதிக வாய்ப்பு உள்ளது” என்று ஆச்சர்யப்பட வைக்கிறார் பிரபல சோதிடர் ஷத்குரு. அவர் கூறுகையில், “சசிகலா மீன ராசி ரேவதி நட்சத்திரம் சிம்ம லக்னத்தில் பிறந்தவர். கடந்த 2016-ல் இருந்து இவருக்கு சனி 10-ல் வந்து அமர்ந்தாலே மிகப்பெரிய துன்பத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அதனால்தான் 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறைவாசம், கணவர் மரணம், தாலி பாக்கியம் பறிபோகும் பதவி பறிப்பு ஆகியவை நடந்து ரெம்பவே படாய்படுத்தியெடுத்திருக்கும்” என்று சொல்லும் ஷத்குரு, “கடந்த 4 வருடங்களில் இவர் சந்தித்த அவமானங்கள், துன்பங்கள் ஏராளம். பட்ட துன்பங்கள் அவமானங்கள் எல்லாம் அப்படியே தலைகீழாக மாறி மிகப்பெரிய அளவிற்கு அரசியல் அதிகாரம் மனதில் சந்தோசம். அவமானப்படுத்தியவர்கள் மண்டியிடுவது ஏன்? இவர் கைகாட்டும் ஆள்தான் முதல்வராகும் அளவிற்கு சக்தி படைத்தவராக வலம் வருவார். அதற்கொல்லம் காரணம் அக்டோபர் 27 குருபெயர்ச்சி வருகிறது.

இவரது ஜாதக கட்டத்தில் குரு 11ம் இடத்தில் அமருகிறார். இது லாபஸ்தானம் ஆகும். இது ஜோதிட சாஸ்திரத்தில் அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை குருபகவான் கொடுப்பார். குரு பார்க்க கோடி நன்மை. ஆகையால் அரசியலில் இருந்த வந்த எதிரிகள் எல்லாம் ஓடி ஒழிவார்கள். விவசாய நிலங்கள் செழிப்படையும், அரசியலில் மிகப்பெரிய பதவிகள் தேடி வரும் என்பது நிதர்சனமான உண்மை. வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி கிரகங்களும் இவருக்கு சாதகமாகவே அமைகிறது. இப்படி 4 கிரகங்கள் சசிகலாவுக்கு சாதகமான சூழ்நிலைக்கே வருகிறது. மொத்தத்தில் வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல் சசிகலாவுக்கு ஒரு வசந்தகாலம் என்றே சொல்லலாம். வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா கை காட்டும் ஆட்களே ஆட்சி அதிகாரத்தில் அமர அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு சசிகலா கை ஓங்கி இருக்கும். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவியாக தமிழகத்தில உலா வருவார். இவரது வருகை அதிமுகவிற்கு சரிவை தரும் ” என்று உறுதிபட சொல்கிறார் ஷத்குரு.

இந்த ஜோதிடர் ஷத்குருவை யாரும் அவ்வளவு சிக்கிரத்தில் மறந்துவிட முடியாது. “ஜெயலலிதா இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியில் அமரமாட்டார். மருத்துவமனை அல்லது சிறையில் இருப்பார்” என்று சொல்லியவர்தான் இந்த ஷத்குரு.