சென்னை ஐஐடியில் சாதி கொடுமைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – மத்திய அரசிடம் டி.ஆர்.பாலு எம்பி கேள்வி!

 

சென்னை ஐஐடியில் சாதி கொடுமைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – மத்திய அரசிடம் டி.ஆர்.பாலு எம்பி கேள்வி!

சென்னை ஐஐடி விடுதியில் 2019ஆம் ஆண்டில் பாத்திமாவின் தற்கொலையைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி, மத வேறுபாடுகளால் உயர்கல்வியின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்று மக்களவையில் திமுக எம்பி டிஆர் பாலு கேள்வியெழுப்பினார்.

சென்னை ஐஐடியில் சாதி கொடுமைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – மத்திய அரசிடம் டி.ஆர்.பாலு எம்பி கேள்வி!

மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரும் நிலையில், துணைப் பேராசிரியர்கள் பதவி விலகி வருவதைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்றும் அவர் கேள்வி கேட்டார். இதற்கு மத்தியக் கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

சென்னை ஐஐடியில் சாதி கொடுமைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – மத்திய அரசிடம் டி.ஆர்.பாலு எம்பி கேள்வி!

அப்போது அவர், “சென்னை ஐஐடியில் சாதி, மத வேறுபாடுகளைக் களைய அதுசார்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மனநிலையைச் சீர்செய்யத் தேவையான மனநல மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டம், 1961-இன் படி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எந்த சாதி, மத வேறுபாடுகளும் பின்பற்றப்படுவதில்லை” என்றார்.