6ஆம் கட்ட வாக்குப்பதிவில் அசத்தும் மே.வங்க வாக்காளர்கள்… இப்போவே இத்தனை சதவீத வாக்குகள் பதிவா?

 

6ஆம் கட்ட வாக்குப்பதிவில் அசத்தும் மே.வங்க வாக்காளர்கள்… இப்போவே இத்தனை சதவீத வாக்குகள் பதிவா?

மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவுகளும் பயங்கர மோதல், வன்முறைச் சம்பவங்களுடன் நடந்தன. குறிப்பாக கடந்த நான்காம் கட்ட வாக்குப்பதிவில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி நான்கு திருணாமுல் கட்சி தொண்டர்களை சுட்டுக்கொன்றனர். இது மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

6ஆம் கட்ட வாக்குப்பதிவில் அசத்தும் மே.வங்க வாக்காளர்கள்… இப்போவே இத்தனை சதவீத வாக்குகள் பதிவா?

மோதலுக்குக் காரணம் பாஜக, திருணாமுல் கட்சித் தலைவர்களான மோடி, அமித் ஷா, மம்தா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. உச்சக்கட்டமாக மம்தா பானர்ஜிக்கும் பாஜக தலைவர் ராகுல் சின்ஹாவுக்கும் பிரச்சாரம் செய்ய தடைவிதித்தது தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து மம்தா தர்ணாவில் ஈடுபட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் ஏப்ரல் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 6 மாவட்டங்களில் நடைபெற்றது. மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்தது.

6ஆம் கட்ட வாக்குப்பதிவில் அசத்தும் மே.வங்க வாக்காளர்கள்… இப்போவே இத்தனை சதவீத வாக்குகள் பதிவா?

இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமாக 43 தொகுதிகள் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர். 306 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 27 பேர் பெண் வேட்பாளர்கள். இன்றும் எந்த அசாம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிவுபெறும்.