என்னை யாராவது மிரட்டினால் நான் கர்ஜிக்கிறேன்.. முதல்ல புலி.. இப்பம் சிங்கம்.. பல அவதாரங்களை எடுக்கும் மம்தா

 

என்னை யாராவது மிரட்டினால் நான் கர்ஜிக்கிறேன்.. முதல்ல புலி.. இப்பம் சிங்கம்.. பல அவதாரங்களை எடுக்கும் மம்தா

என்னை யாராவது மிரட்டினால் நான் கர்ஜிக்கிறேன் என்று பா.ஜ.க.வை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கினார்.

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் சமூக பணியாளர்கள் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையைில் கூறியதாவது: நீங்கள் என்னோடு இருந்தால், அனைத்து மிரட்டல்களையும் நான் நிறுத்தி விடுவேன். நான் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன்.

என்னை யாராவது மிரட்டினால் நான் கர்ஜிக்கிறேன்.. முதல்ல புலி.. இப்பம் சிங்கம்.. பல அவதாரங்களை எடுக்கும் மம்தா
திரிணாமுல் காங்கிரஸ்

யார் என்னை மிரட்டி முயற்சி செய்தால், அவர்களிடம் நான் கர்ஜிக்கிறேன். பா.ஜ.க.வுக்கு குட்பை சொல்லுங்க. மேற்கு வங்கத்தில் அவர்கள் நுழைவதை தடுங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார். மால்டாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பேசுகையில், பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்டு வருவது என்பது கலவரங்களை ஊக்குவிப்பது என்று அர்த்தம்.

என்னை யாராவது மிரட்டினால் நான் கர்ஜிக்கிறேன்.. முதல்ல புலி.. இப்பம் சிங்கம்.. பல அவதாரங்களை எடுக்கும் மம்தா
பா.ஜ.க.

கலவரங்களை நீங்கள் விரும்பினால் உங்கள் வாக்கை பா.ஜ.க.வுக்கு அளியுங்கள். மம்தா தனியாக இல்லை என்பதால் நீங்கள் (பா.ஜ.க.) அவளை தோற்கடிக்க முடியாது. மக்களின் ஆதரவு அவளுக்கு உள்ளது. நான் உயிரோடு இருக்கும் காலம் வரை இங்கு பா.ஜ.க.வை அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். மற்றொரு கூட்டத்தில், நான் வாழும் காலம் வரை ஒரு ராயல் பெங்கால் புலி போல் வாழ்வேன் என்று மம்தா தெரிவித்து இருந்தார்.