ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கிய கூட்டம்… பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி..

 

ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கிய கூட்டம்… பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி..

பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தன்னை பேச அழைத்த போது கூட்டத்தினர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கியதால் முதல்வர் மம்தா பானர்ஜி பேச மறுத்து விட்டார்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசியலில் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பதால் ஏதாவது எதிர்பாராதது நடக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கிய கூட்டம்… பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி..
பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி

வலிமை தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜியை பேச அழைத்தபோது, கூட்டத்தினர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி, அரசாங்க நிகழ்ச்சியில் கண்ணியம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. ஒருவரை அழைத்தபின் அவர்களை அவமதிப்பது உங்களுக்கு பொருந்தாது. ஒரு போராட்டமாக, நான் எதுவும் பேச மாட்டேன் என்றார்.

ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கிய கூட்டம்… பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி..
உஷா உதுப்

பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச மறுத்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக விக்டோரியா மெமோரியலில் பிரதமர் மோடி முன்னிலையில் பாடகி உஷா உதுப், ரவீந்திரநாத் தாகூரின் ஏக்லா சோலோ ரே பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.