இரண்டு பெண்கள் -எட்டு ஆண்கள் -எட்டு மணி நேரம் -ஹோலியன்று காட்டுக்குள் நடந்த கொடுமை

 

இரண்டு பெண்கள் -எட்டு ஆண்கள் -எட்டு மணி நேரம் -ஹோலியன்று காட்டுக்குள் நடந்த கொடுமை


ஹோலி பண்டிகை கொண்டாடிய இரு பெண்களை எட்டு வாலிபர்கள் கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

இரண்டு பெண்கள் -எட்டு ஆண்கள் -எட்டு மணி நேரம் -ஹோலியன்று காட்டுக்குள் நடந்த கொடுமை


திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில்,மார்ச் 29ம் தேதி நடந்த ஹோலி பண்டிகையன்று 14 வயது மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகள் ஜாலியாக ஹோலி பண்டிகை கொண்டாட சென்றார்கள் .அப்போது அவர்களை அதே பகுதியை சேர்ந்த 19 வயது முதல் 23 வயதான எட்டு வாலிபர்கள் நோட்டமிட்டார்கள் .பின்னர் அவர்கள் மாலை வரை ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாடி முடித்ததும் ,வீட்டுக்கு செல்ல போகும்போது அந்த இடத்திற்கு அந்த எட்டு வாலிபர்களும் தங்களின் காரில் வந்தார்கள் .
பின்னர் அவர்கள் அந்த இரு பெண்களையும் தங்களின் காரில் அங்குள்ள ஒரு காட்டிற்குள் கடத்தி சென்றனர் .அதன் பிறகு அவ்ர்கள் அனைவரும் அந்த இரவு முழுவதும் அந்த இரு பெண்களையும் பலாத்காரம் செய்தனர்,பிறகு மயக்க நிலையிலிருந்த பெண்களை பார்த்து அவர்கள் இறந்து விட்டதாக நினைத்து அவர்கள் ஓடிவிட்டார்கள் .பின்னர் மறுநாள் அவர்களிடமிருந்து தப்பி வந்த அந்த பெண்கள் இந்த விஷயத்தை தங்களின் பெற்றோரிடம் கூறவில்லை .ஆனால் அவர்களின் பெற்றோர் அவர்களின் உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகப்பட்டு விசாரித்தும் உண்மையை கூறிவிட்டார்கள் .பிறகு அவர்கள் மார்ச் 30ம் தேதியன்று அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த எட்டு வாலிபர்கள் மீது புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த பலாத்காரத்தை செய்த வாலிபர்களான பிமல் டெபார்மா,சோயல் டெபார்மா,
, மைக்கேல் டெபார்மா, நிஷித் டெபார்மா, பீரேஷ் டெபார்மா, ஜாகு டெபார்மா, பிகாஷ் டெபார்மா மற்றும் ஹ்ரிஷித் டெபார்மா ஆகியோரை கைது செய்தனர் .

இரண்டு பெண்கள் -எட்டு ஆண்கள் -எட்டு மணி நேரம் -ஹோலியன்று காட்டுக்குள் நடந்த கொடுமை