புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

 

புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

புதன் கிழமையானது உள்ளத்தின், மனத்தின் சுத்திகரிப்பு நாளாக விளங்குகின்றது. புதன்கிழமை விரதம், ஞானத்தையும் அமைதியையும் வழங்குவதோடு, எல்லா மகிழ்ச்சியையும் அடைய உதவுகிறது. மனிதனின் வாழ்வு இந்த கலியுகத்தில் தினசரி உணவையே நம்பி இருக்கிறது. எனவே, உணவு சுத்தமாக இருந்தால்தான் உடல், மனம், உள்ளம், புத்தி, அறிவு இந்த ஐந்தும் சுத்தமாக இருக்கும். தற்போது இருக்கும் பரபரப்பு சூழலில் சமைக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கோம். ஹோட்டல் சாப்பாடு, வெளி சாப்பாடு உடலை, மனதை ஒளி இழக்கச் செய்கிறது. வாரத்தின் நடுநாளான புதன் கிழமையாவது சுத்தமான உணவை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். மேலும், உடலும் மனமும் உற்சாகத்துடன் இருக்கும்.

புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

கொரோனா தொற்றால் பள்ளிக்கூடங்கள் திறக்காததால் பாடங்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் அலுவலகங்கள் திறக்காததால் எல்லோரும் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதால் அலைகற்றைகளின் அதிர்வுகளோடே எந்நேரமும் இருக்கின்றோம். அதிலும், குழந்தைகளுக்கு இந்த கதிர்வீச்சு அவர்களின் கண் மற்றும் மனநலத்தை ஏற்படுவதற்கு நிறைய வாய்புகள் உள்ளதாக மருத்துவர்களும் அறிஞர்களும் கூறுகிறார்கள். வருங்காலத்தில், செல்போனால் ஏற்படும் நோய்கள், நிறையப் பெருகும் என்பதால் புதன் கிழமையன்றும், சப்தமித் திதி நாளிலும் ஆற்றும் பூஜைகளே இதன் பாதிப்புகளை ஓரளவு

தணிக்க உதவும். குறைந்தது ஐந்து மணி நேரம் விளக்குகளை ஏற்றி வைத்தல், சாம்பிராணி தூபம், ஊதுபர்த்திகளைத் தினந்தோறும் ஆலயத்திலும், இல்லத்திலும் ஏற்றி வைத்து வழிபடுதல் மூலம் நாம் வாழும் தெரு மாநிலம், நாட்டிற்கு மட்டுமல்லாது விண்வெளியையும் சுத்திகரிப்பு செய்யமுடியும். பிற ஜீவராசிகளுக்காகவும் விளக்கேற்றுங்கள்! வீட்டில் விளக்கு ஏற்றும்போது நமக்காக ஒன்றும், பிற ஜீவராசிகளுக்காக ஒன்றும் என இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடவும். வசதி இல்லாதவர்கள், ஒரே விளக்கில் இரண்டு திரிகளைத் தமக்காகவும், மூன்றாவதைப் பிற ஜீவன்களுக்காகவும் ஏற்றிட வேண்டும். புதன் கிழமை அனைவரும் குறைந்தது இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடுவது சிறப்பானதாகும்.

புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

பஞ்ச பூத விளக்கு பூஜையும் புதனும்!

பஞ்ச பூத விளக்குப் பூஜையை நிகழ்த்திட, புதன் கிழமை மிகவும் ஏற்றதாகும். உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களால் ஆனவை ஆதலின், இவற்றைப் பஞ்ச பூத சக்திகளால் சுத்திகரிப்பதற்காக, கோவில்களிலும், வீடுகளிலும் புதன் கிழமை தோறும் ஐந்து விளக்குகளை ஏற்றிப் பூஜித்தல் சிறப்புடையதாகும்.

புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

புதன் கிழமை தோறும் உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஐந்தையும் சுத்திகரிக்க உதவிடுவதாக, கைகளால் அரைத்துக் காய வைத்த சந்தனத் தூள், அத்தர், புனுகு, ஜவ்வாது, புனுகு ஆகிய ஐந்தையும் கலந்த திரவியப் பொடியைச் சாம்பிராணி தூபத்தில் அவ்வப்போது நறுமணம் நிறைய கோயில்களிலும், வீடுகளிலும் தூபம் இட்டு வந்தால் மனக் குழப்பங்கள் நீங்கி, மனம் சிறிது, சிறிதாக அமைதி பெறுவதை நன்கு காணலாம்.

புத்தி சுத்திகரிப்புக்கு புதன் வழிபாடு!

இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். புதன்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு

-வித்யா ராஜா