வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி :அதீத கனமழைக்கு வாய்ப்பு!

 

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி :அதீத கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி :அதீத கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. இந்த சூழ்நிலையில் வட மேற்கு வங்க கடல் பகுதியில் ( 23ஆம் தேதி ) நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி :அதீத கனமழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.