எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் – காவல்துறை

 

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் – காவல்துறை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட எஸ். வி. சேகர், தேசியக்கொடியை அவமதிப்பது போன்ற கருத்தையும், முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாகவும் பேசி இருந்தார். இது குறித்து சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் – காவல்துறை

இதையடுத்து இன்று நடிகர் எஸ்.வி.சேகர் மத்திய குற்ற பிரிவு போலீஸ் முன்பு ஆஜராகினார்,ஏற்கனவே நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக தேசிய கொடி அவமதிப்பு புகாரில் சேகரிடம் விசாரணை நடந்தது.

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் – காவல்துறை

இந்நிலையில் தேசியக்கொடியை அவமதித்ததாக மன்னிப்பு கேட்டால் எஸ் வி சேகரை கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ் வி சேகர் மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 2 வரை அவகாசம் அளிக்கபட்டுள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் காவல்துறை இவ்வாறு தகவல் தெரிவித்துள்ளது.