நாம் தமிழர் நிர்வாகியை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி…அறந்தாங்கியில் பரபரப்பு!

 

நாம் தமிழர் நிர்வாகியை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி…அறந்தாங்கியில் பரபரப்பு!

நாம் தமிழர் கட்சி நிர்வாகியை காங்கிரஸ் நிர்வாகி தாக்கிய சம்பவம் அறந்தாங்கியில் அரங்கேறியுள்ளது.

நாம் தமிழர் நிர்வாகியை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி…அறந்தாங்கியில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி துவராகாம்பால்புரத்தை சேர்ந்தவர் பரத். இவர் பெருங்காடு கிராமத்தில் உள்ள துரைராஜ் என்பவருக்கு பணம் கொடுத்துள்ளார். பணத்தைத் திரும்பக் கேட்டபோது துரைராஜ் பெருங்காடு வரச்சொல்ல, பரத்தும் அங்கு சென்றதாக தெரிகிறது. அங்கு சென்ற பரத்துடன் துரைராஜ் மற்றும் சிலர் பணத்தை கொடுக்க முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டனர். இதைக்கண்ட துரைராஜன் பக்கத்து வீட்டுக்காரர் ராஜீவ் காந்தி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பரத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். ஏற்கனவே தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி சார்பில் பெருங்காடு கிராமத்தில் கொடிக்கம்பம் நட்ட போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி அதை பிடுங்கி வீசினார். இதனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பரத்துக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்திக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது, இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜீவ் காந்தி பரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் நிர்வாகியை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி…அறந்தாங்கியில் பரபரப்பு!

இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்ததுடன் காயமடைந்த பரத்தை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அத்துடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ராஜீவ் காந்தி மற்றும் அவரின் ஆதரவாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.