தஞ்சாவூர் பாசனத்திற்கு நீர் கிடைப்பதில்லை! திமுக எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் புகார்

 

தஞ்சாவூர் பாசனத்திற்கு நீர் கிடைப்பதில்லை! திமுக எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் புகார்

தஞ்சாவூரில் உள்ள ஏரிகளுக்கு பாசன நீர் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவையாறு எம்.எல்.ஏ, பொதுப்பணி துறை தலைமை பொறியாளரிடம் மனு அளித்தார்.

தஞ்சாவூர் பாசனத்திற்கு நீர் கிடைப்பதில்லை! திமுக எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் புகார்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாயனூரில் உள்ள கட்டளை வாய்க்காலில் பாசன நீர் திறக்கப்பட்டது. அந்த நீர் இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு வரவில்லை. அதனால் விவசாய பணிகள், நாற்று விடும் பணிகள் போன்றவற்றை விவசாயிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

தஞ்சாவூர் பாசனத்திற்கு நீர் கிடைப்பதில்லை! திமுக எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் புகார்

எனவே தஞ்சாவூரில் உள்ள ஏரிகளுக்கு பாசன நீர் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் தி.மு.க மாவட்ட செயலாளரும் திருவையாறு சட்ட மன்ற உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் திருச்சியில் உள்ள பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அவருடன், சி.பி.எம் சி.பி.ஐ, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் உடனிருந்தனர்.

தஞ்சாவூர் பாசனத்திற்கு நீர் கிடைப்பதில்லை! திமுக எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் புகார்

கடந்த எட்டு ஆண்டுகளாகவே உரிய நேரத்தில் தஞ்சாவூரில் பாசனத்திற்கு நீர் கிடைப்பதில்லை. எனவே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார். அதே போல நீர் நிலைகள் தூர்வாரப்படுவதாக ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை, முறையாக நீர் நிலைகள் தூர்வாரப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.