திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை தண்ணீர் திறப்பு! – முதல்வர் அறிவிப்பு

 

திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை தண்ணீர் திறப்பு! – முதல்வர் அறிவிப்பு


விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையைத் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை தண்ணீர் திறப்பு! – முதல்வர் அறிவிப்பு


இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பரப்பிக்குளம், ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பரப்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு படுகை 2ம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் (நாளை) 8700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை தண்ணீர் திறப்பு! – முதல்வர் அறிவிப்பு


இதனால், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.