எந்தெந்த நேரத்துல எப்படி தண்ணீர் குடிச்சா ,எந்தெந்த நோய்களிலிருந்து தப்பிக்கலாம்னு தெரிஞ்சுக்கோங்க

 

எந்தெந்த நேரத்துல எப்படி தண்ணீர் குடிச்சா ,எந்தெந்த நோய்களிலிருந்து தப்பிக்கலாம்னு  தெரிஞ்சுக்கோங்க

நமது உடல் 70% நீரால் ஆனது. மனிதன் ஆரோக்கியமாக வாழ நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துசெல்லவும், உடலின் வெப்பநிலையை சீராக்கவும், செரிமானத்தை தூண்டவும் நீர் கண்டிப்பாக தேவை. உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுவதில் நீரின் பங்கு இன்றியமையாதது.

உண்ணும் உணவிலிருந்து உடலுக்கு தேவையான நீரின் அளவு குறிப்பிட்ட சதவீதம் செல்கிறது. எனி னும் உடலில் நீர் பற்றாக்குறை இருந்தால் நீர் வறட்சி டீ ஹைட்ரேட் பிரச்சனைக்கு வழிவகுக்கும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். தாகம் இல்லை என்று சொல்பவர்கள் கூட கண்டிப்பாக 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தண்ணீர் ஆரோக்கிய மானது ஆனால் தினமும் இந்த நேரத்தில் குடித்தால் தான் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.

எந்தெந்த நேரத்துல எப்படி தண்ணீர் குடிச்சா ,எந்தெந்த நோய்களிலிருந்து தப்பிக்கலாம்னு  தெரிஞ்சுக்கோங்க

பலரும் ஒரு வாய் சாப்பிடுவார்கள். உடனே இரண்டு மடக்கு தண்ணீர் குடிப்பார்கள்.

சாப்பிடும்போதுதான் ஊர்க்கதையெல்லாம் பேசுவார்கள். இவை இரண்டுமே தவறு. சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் அருந்தக் கூடாது.

அதேபோல, சாப்பிட்டு அரைமணி நேரம் வரை தண்ணீர் அருந்தக்கூடாது. விக்கல், அடைப்பு போன்று உணவை விழுங்குவதில் சிக்கல் இருந்தால் மட்டும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால், வயிற்றில் உணவைச் செரிக்க உதவும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நீர்த்துப்போய்விடும்.

உமிழ்நீர்ச் சுரப்பையும் பாதிக்கும். சாப்பிடும்போது, `என்ன சாப்பிடுகிறோம்’ என்று உணர்ந்து, நிறம், மணம் ஆகியவற்றை ரசித்து ருசித்துச் சாப்பிடவேண்டும்.

இதை `மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ என்பார்கள். எதையேனும் சிந்தித்துக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.

தினமும் தூங்கி எழுந்ததும் காலையில் பல் துலக்கியதும் ஒரு தம்ளர் நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குங்கள். இது உங்கள் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். நாள் முழுவதும் உங்களை சோர்வின்றி வைத்திருக்கும். அதே நேரம் குளிர்ந்த நீரை தவிர்த்து மிதமான வெந்நீரை குடிப்பது நல்லது.

பிறருடன் பேசிக்கொண்டே சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். வாயை மூடியவாறு மென்று விழுங்கவேண்டும்.

தினமும் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்கள் சோர்வை விர ட்டி அடிக்க ஒரு தம்ளர் தண்ணீர் போது. அதிலும் வேலை நேரத்தில் அதிக பரபரப்பாக இருக்கும் போது ஓய்வெடுக்கவும் நேரமில்லாமல் இயங்க வேண்டும் என்றால் ஒரு தம்ளர் தண்ணீரை குடியு ங்கள்.

பெரும்பாலான நேரங்களில் சோர்வு என்பது உடலில் நீர் பற்றாக்குறை காரணமாகவும் இருக்கலாம். இந்த ஒரு தம்ளர் நீர் குடித்ததும் இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி அமர்ந்துவிடுங்கள். சற்று நிமிடத்தில் மூளையும், உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும். அடுத்த மணித்துளியில் உங்கள் சுறு சுறுப்பை கண்டு நீங்களே வியப்பீர்கள்.