சொந்த வீடு கனவை நனவாக்கும் வாஸ்து பகவான் !

 

சொந்த வீடு கனவை நனவாக்கும் வாஸ்து பகவான் !

நவக்கிரகங்களில் பூமிகாரகனாக விளங்குவது செவ்வாய். அந்த செவ்வாய்க்கு அதிபதியாக இருப்பது முருகன் . அதனால் முருக பெருமானையும், செவ்வாய் பகவானையும் வணங்கி வந்தால் நிச்சயம் வீடு வாங்க வேண்டும் என்ற உங்களின் கனவு நனவாகும் என்று கூறப்படுகிறது.

சொந்த வீடு கனவை நனவாக்கும் வாஸ்து பகவான் !

ஆலயங்களுக்கு செல்லும் போது அங்குள்ள எழுந்தருளியுள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வணங்கலாம். அதேபோல் முருகன் ஆலயங்களிலும், முருகப்பெருமான் தனிச்சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கும் சென்று மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். அதேபோல் நவக்கிரகத்தில் சுக்கிரன் கட்டிடகாரகன் என்று அழைக்கப்படுவது உண்டு. இதனால் நவக்கிரக வழிபாடு என்பது மிக மிக நல்லதாம்.

சொந்த வீடு கனவை நனவாக்கும் வாஸ்து பகவான் !

செவ்வாய் மற்றும் முருக பெருமானை உரிய மலர்கள் சார்த்தி வணங்கி வந்தால், வீடு வாங்கும் யோகம் உங்களை தேடி வரும். அதேபோல், இப்போது குடியிருக்கும் வீட்டில், அது வாடகை வீடாக இருந்தாலும் கூட அதில் சில வாஸ்து மாற்றங்களும், தினம்தோறும் சாம்பிராணி போட்டு வாஸ்து பகவானை வணங்கி வாருங்கள். முருகனை செவ்வரளி மலர்கள் சார்த்தி, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வாருங்கள், உங்களுக்கு முருகனின் அருளுடன் சேர்த்து அஷ்டதேவதைகளும், வாஸ்து பகவானும் உங்கள் நீண்ட நாள் கனவான மனை வாங்கும் கனவை நனவாக்கி தருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.