ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் : விசாரணையில் தெரிய வந்த உண்மை!
Nov 28, 2020, 13:23 IST1606550035000
கூடலூர் வடக்கு காவல் நிலையம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த இளைஞர் ஒருவர் பிடிபட்டார்.
தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்து வந்துள்ளார். அப்பகுதியில் வாகன தணிக்கையில் நின்றிருந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சந்தேகப்படும் படி சுற்றி திரிந்து வந்த அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது வாலிபர் தெளிவின்றி பதில் கூறியதுடன், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லியுள்ளார் . இதனால் விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இளைஞரின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டநிலையில் அவரது பெற்றோர் காவல் நிலையம் வந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.