கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து: 7 வயது சிறுமி பரிதாப மரணம்!

 

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து: 7 வயது சிறுமி பரிதாப மரணம்!

புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் புரெவி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வேப்பந்தட்டை அருகே இருக்கும் ஒரு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து: 7 வயது சிறுமி பரிதாப மரணம்!

வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி வெங்கடேசன் – திருச்சடை. இவர்களது மகள் யோசனா(7). நள்ளிரவு 3 பேரும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய சிறுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்களை தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.