மதுபோதையில் ஏற்பட்ட தராறில் கூலி தொழிலாளி படுகொலை – இருவர் கைது!

 

மதுபோதையில் ஏற்பட்ட தராறில் கூலி தொழிலாளி படுகொலை – இருவர் கைது!

சேலம்

சேலம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி கத்தியால் குத்திகொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (42). இவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று மலை கிருபாகரன், தனது நண்பர்களான சீனிவாசன் உள்ளிட்டோருடன் ஆனந்தா பாலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சென்று மது அருந்தி உள்ளார். அப்போது, கிச்சிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த மோகன் என்பவரும், தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

மதுபோதையில் ஏற்பட்ட தராறில் கூலி தொழிலாளி படுகொலை – இருவர் கைது!

கிருபாகரனின் நண்பர் மனைவியுடன், மோகன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த, மோகன் தான் வைத்திருந்த கத்தியால் கிருபாகரனை சரமாரியாக குத்தினார்.

மேலும், அதனை தடுக்க முயன்ற சினிவானும் படுகாயம் அடைந்தார். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, மோகன் உள்ளிட்ட 2 பேரை கைதுசெய்தனர்.