சமையல் செய்தபோது உடலில் தீ பற்றியதில், தொழிலாளி பலி!

 

சமையல் செய்தபோது உடலில் தீ பற்றியதில், தொழிலாளி பலி!

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள தீர்த்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். கூலி தொழிலாளி. இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வீட்டில் உணவு சமைப்பதற்காக மண்ணெண்ணை ஸ்டவ்வை பற்றவைக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ஸ்டவ் கவிழ்ந்து, தங்கராஜின் மீது மண்ணெண்ணை சிதறியது.

சமையல் செய்தபோது உடலில் தீ பற்றியதில், தொழிலாளி பலி!

இதில், அவரது உடையில் தீப்பற்றி எரிந்தில், அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் தங்கராஜை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை எடுத்த பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு, தங்கராஜுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், திங்கள் கிழமை இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தீர்த்தம்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.