மது அருந்திய தொழிலாளி மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

 

மது அருந்திய தொழிலாளி மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே மது அருந்திய தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வீ.பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (41) கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு, தனது வீட்டின் மாடியில் அமர்ந்து மது அருந்திய சுப்ரமணி, மீதமுள்ள மதுவை மாடியிலேயே வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார்.

மது அருந்திய தொழிலாளி மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

மறுநாள் காலையில் எஞ்சிய மதுவை குடித்தபோது, அதில் மண்ணெண்ணை வாசம் வந்ததாக கூறப்படுகிறது. இதனை தனது மகளிடம் தெரிவித்து விட்டு, சுப்ரமணி கரும்பு வெட்டும் வேலைக்கு புறப்பட்டு சென்றார். தோட்டத்தில் பணியில் ஈடுபட்டபோது திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், சுப்ரமணி வீடு திரும்பிய நிலையில், அவருக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, உறவினர்கள் அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், சுப்ரமணி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது தங்கை இந்திரா தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.