மகள் உயிரிழந்த வேதனையில், கூலி தொழிலாளி தற்கொலை!

 

மகள் உயிரிழந்த வேதனையில், கூலி தொழிலாளி தற்கொலை!

தேனி

தேனி அருகே மகள் உயிரிழந்த வேதனையில், கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் மின்வாரிய தெருவில் வசித்து வந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மகளை கேரள மாநிலம் கல்லாறில் உள்ள உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு குடும்ப தராறில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

மகள் உயிரிழந்த வேதனையில், கூலி தொழிலாளி தற்கொலை!

துக்க நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்பிய முருகன், மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு திரும்பிய அவரது மனைவி, முருகன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.