கொரோனா சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் உயிரிழப்பு!

 

கொரோனா சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் உயிரிழப்பு!

கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களைக் காப்பாற்ற அரசு திணறி வருகிறது. சாமானியர்களை மட்டுமே தாக்கி வந்த கொரோனா தற்போது பாதுகாப்பு பணிvriddhachalam-tahsildarயில் ஈடுபட்டுள்ள காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகளை காவு வாங்க ஆரம்பித்துள்ளது.
தற்போது கொரோனாவிற்க்கு சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் உயிரிழப்பு!
கவியரசு என்பவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யபட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். களப்பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டு வருவதால் வட்டாட்சியர் ஒருவர் உயிரிழந்திருப்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.