தேனியில் வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஓட்டு வில்லைகள் பதிப்பு!

 

தேனியில் வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஓட்டு வில்லைகள் பதிப்பு!

தேனி

தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை பதிக்கும் பணியை ஆட்சியர் கிருணனுண்ணி இன்று தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற தேர்தலில், தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தேனி நகராட்சிக்கு உட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் பதிக்கும் பணி நடைபெற்றது.

தேனியில் வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஓட்டு வில்லைகள் பதிப்பு!

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, அரசுப்பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் பதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.