திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

 

திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

மதுரை

திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் திமுக சார்பில் மணிமாறன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

இந்த நிலையில், செங்கப்படை வாக்குச்சாவடி வாக்குப்பதிவு இயந்திரத்தை எண்ணுவதற்காக எடுத்தபோது, அதில் பதிவு எண் மாறுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, திமுக வேட்பாளர் மணிமாறன் மற்றும் அவரது முகவர்கள் அந்த பெட்டியை எண்ண எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த தொகுதி வாக்கு வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடு உள்ளது. மேலும், இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.