“விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்” : திருமாவளவன் அறிவிப்பு!

 

“விசிக தனிச்சின்னத்தில்  தான் போட்டியிடும்” : திருமாவளவன் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

“விசிக தனிச்சின்னத்தில்  தான் போட்டியிடும்” : திருமாவளவன் அறிவிப்பு!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அறிவித்தார் .

“விசிக தனிச்சின்னத்தில்  தான் போட்டியிடும்” : திருமாவளவன் அறிவிப்பு!

முன்னதாக நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுகவின் தனித் தன்மை காக்கப்பட வேண்டும் என்பதற்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என யாரும் எங்களை வலியுறுத்தவில்லை” என்றார். அந்த வகையில் மதிமுகவை தொடர்ந்து விசிக வும் தனிச்சின்னத்தில் போட்டி என திருமாவளவன் தெரிவித்துள்ளார் . கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் வைகோ , திருமா, விஜயகாந்த் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்தனர். இருப்பினும் அந்த தோல்வியில் தோல்வியே கிடைத்தது. தற்போது விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் வருகின்ற 2021 சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.