`நள்ளிரவு நேரம்; காப்பாற்றுங்கள் என்று சத்தம்!’- அம்மாவின் தோழியின் கண்முன் கல்லூரி மாணவனுக்கு நடந்த துயரம்

 

`நள்ளிரவு நேரம்; காப்பாற்றுங்கள் என்று சத்தம்!’- அம்மாவின் தோழியின் கண்முன் கல்லூரி மாணவனுக்கு நடந்த துயரம்

முன்விரோதத்தால் சென்னை வியாசர்பாடியில் நள்ளிரவில் கல்லூரி மாணவன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சுந்தரம்  தெருவை சேர்ந்த விநாயகி என்பவரின் மகன் பிரசாந்த். 22 வயதான இவர் சென்னை அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார். இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. மீன் வியாபாரம் செய்து வரும் பிரசாந்த்தின் அம்மா விநாயகியின் தோழி அம்சா. இருவரும் காசிமேடு மீன்மார்க்கெட்டில் மீன்வாங்கி வருவது வழக்கம்.

`நள்ளிரவு நேரம்; காப்பாற்றுங்கள் என்று சத்தம்!’- அம்மாவின் தோழியின் கண்முன் கல்லூரி மாணவனுக்கு நடந்த துயரம்

இந்த நிலையில், மீன் வாங்க அம்சாவை அழைத்துவரும்படி தன்னுடைய மகன் பிரசாந்த்திடம் கூறியுள்ளார் விநாயகி. பைக்கில் சென்ற பிரசாந்த் அம்சாவை அழைத்து வந்துள்ளார். நள்ளிரவில் அவர்கள் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. பைக்கை நிறுத்திய பிரசாந்த்தை கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பிரசாந்த், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை பார்த்து அலறிய அம்சா, காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரசாந்த்தை காப்பாற்ற உடனடியாக தோழி விநாயகிக்கு செல்போனில் தகவல் கூறியுள்ளார். அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்த விநாயகி, மகனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரசாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

`நள்ளிரவு நேரம்; காப்பாற்றுங்கள் என்று சத்தம்!’- அம்மாவின் தோழியின் கண்முன் கல்லூரி மாணவனுக்கு நடந்த துயரம்

இதுகுறித்து தகவல் அறிந்த வியாசர்பாடி காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பிரசாந்த்தை வெட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதை வைத்து காவல்துறையினர் விசாரித்தபோது தேசிகானந்த புரத்தை சேர்ந்த பாலச்சந்துரு (18) உள்பட 3 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

`நள்ளிரவு நேரம்; காப்பாற்றுங்கள் என்று சத்தம்!’- அம்மாவின் தோழியின் கண்முன் கல்லூரி மாணவனுக்கு நடந்த துயரம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கல்லூரி மாணவனான பிரசாந்த் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. முன்விரோதத்தால் இந்தக் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர்தான் பிரசாந்த் எதற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவரும்” என்றனர்.