விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 336 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் அதிகரிக்கும் பாதிப்பு

 

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 336 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் அதிகரிக்கும் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 336 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் அதிகரிக்கும் பாதிப்பு

இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. விருதுநகரில் மேலும் 336 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,636 ஆக அதிகரித்துள்ளது. அதே போல திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 285 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5,517 ஆக அதிகரித்துள்ளது.