விருதுநகரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. பாதிப்பு எண்ணிக்கை 1,595 ஆக அதிகரிப்பு!

 

விருதுநகரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. பாதிப்பு எண்ணிக்கை 1,595 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா அதிகமாக பரவி வரும் மாவட்டங்களுள் ஒன்று விருதுநகர்.

விருதுநகரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. பாதிப்பு எண்ணிக்கை 1,595 ஆக அதிகரிப்பு!

அங்கு ஏற்கனவே 1,306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரு கர்ப்பிணி உட்பட 289 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,595 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகரில் 644 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 941 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நேற்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.