‘வினையாக மாறிய விளையாட்டு’ பாம்பின் வாலைப்பிடித்து சீண்டிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

 

‘வினையாக மாறிய விளையாட்டு’ பாம்பின் வாலைப்பிடித்து சீண்டிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

பாம்பின் வாலை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் இணையத் தலத்தில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீர் நிலையின் அருகே நின்று கொண்டு, தண்ணீரில் இருந்த பாம்பு ஒன்றின் வாலை பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு சீண்டியும் அந்த பாம்பு நீரில் இருந்து வெளியே வரவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக, மேலே இருந்து வந்த மலைப்பாம்பு ஒன்று இளைஞரை நோக்கி சீறிக் கொண்டு வருகிறது.

‘வினையாக மாறிய விளையாட்டு’ பாம்பின் வாலைப்பிடித்து சீண்டிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

விளையாட்டுக்கு இடையே அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் வழுக்கி அந்த நீர் நிலையில் விழுகிறார். அவருடன் சேர்ந்து அந்த மலைப்பாம்பும் நீருக்குள்ளே விழுகிறது. ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழியை உணர்த்தும் வகையில் இருக்கும் இந்த வீடியோ, வைரல் ஆகி வருகிறது. விளையாட்டாக அந்த இளைஞர் செய்த செயல் அவருக்கே வினையாக முடிந்திருக்கிறது.

2 பாம்புகளுடன் நீரில் விழுந்த அந்த இளைஞரின் கதி என்னவென பலரும் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ The unexplained என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.