எங்கிருந்துடா வரீங்க… பையத்தியமா இவரு!! வடிவேலு போல புலம்பவிட்ட சுயேட்சை வேட்பாளர்

 

எங்கிருந்துடா வரீங்க… பையத்தியமா இவரு!! வடிவேலு போல புலம்பவிட்ட சுயேட்சை வேட்பாளர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா குடும்பம் தன்னை மிரட்டுவதாகவும், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்றும் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார் ஓபிஎஸ். அதுவே தர்மயுத்தம். ஆனால் அந்த மர்மம், மர்மமாகவே தொடர்கிறது.

எங்கிருந்துடா வரீங்க… பையத்தியமா இவரு!! வடிவேலு போல புலம்பவிட்ட சுயேட்சை வேட்பாளர்

தர்ம யுத்தத்தின் முதல் பகுதி இப்படி இருக்கையில் இரண்டாம் தர்மயுத்தமாக வேறு ஒன்று முளைத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரும், அன்பு அறம் அமைதி தேசிய கட்சியின் தலைவரும் நிறுவனருமான மா.வெங்கடேசன், தனது பென்டிரைவ் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்கும்போது அவர் விநியோகித்த துண்டு பிரசுரத்தில், “எல்லாம் வல்ல இறைவன் மா. வெங்கடேசன் ஆகிய நான் பூமியில் அக்கிரமங்கள் பெருகியதால் அவற்றை அழிப்பதற்காகவே பூமிக்கு இறங்கி கட்டளைகள் மூலம் கொள்ளை நோய், இயற்கை சீற்றங்கள் உருவாகி மக்களை அழித்துக்கொண்டிருக்கின்றேன். வருகின்ற 2022ம் ஆண்டு உலக மகா யுத்தத்தை ஆரம்பிக்க போகிறேன். இந்த உலகா மகா யுத்தம் 14 ஆண்டுகள் நடைபெறும் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட உடனே உலக மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு மக்களை அழித்துவிடுவேன். இந்த உலக மகா யுத்தம் முடிவில் மிஞ்சி இருப்பவர்கள் என்னால் ஆசிர்வதிக்கப்படுவர்கள்

இந்த யுத்தத்திற்கு முன்னோட்டமாக தான் தேர்தல் என்னும் தர்ம யுத்தத்தில் கலந்துகொண்டு தர்ம யுத்தம் செய்து கொண்டிருக்கின்றன. உன்னுடைய செயல், எண்ணம் தர்மத்திற்கு எதிராக உள்ளது. நீ யாராக இருந்தாலும் தர்மத்தின்படி வாழாவிடில் உன்னை நான் பூமியில் இருந்து நீக்கி விடுவேன். இதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும் என விரும்புகின்றாயா அப்படியெனில் நீயும் என்னுடன் தர்மயுத்தத்தில் கலந்துகொள். உலக மகா யுத்தம் முடித்தவுடன் 2036 இல் புதிய வானம், புதிய பூமியை உருவாக்குவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு வழக்கறிஞரான வெங்கடேசனின் இந்த துண்டு பிரசுரங்களை பார்த்த பலரும், ‘தர்மயுத்தம் நடத்தும் ஓ.பி.எஸ்ஸின் தம்பி’ என கிண்டல் அடித்துவருகின்றனர்.