கிராம சபைக் கூட்டம் நடத்தக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

 

கிராம சபைக் கூட்டம் நடத்தக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட கிராம சபைக்கூட்டத்தை நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் கிராம சபைக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன் படி கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடைபெறவிருந்த கூட்டத்தை, ரத்து செய்து தமிழக அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டது.

கிராம சபைக் கூட்டம் நடத்தக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

ஏற்கனவே கடந்த மே மாதம் உழைப்பாளர் தினத்தன்றும் கிராம சபை ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த முறை நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அரசு அனுமதி வழங்காததால், தடையை மீறி திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிராம சபைக்கூட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கிராம சபைக் கூட்டம் நடத்தக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

இந்த நிலையில், அக்.2ம் தேதி ரத்து செய்யப்பட்ட கிராம சபைக்கூட்டத்தை மீண்டும் நடத்தக்கோரி அருண் அய்யனார் என்பவர் முறையீடு செய்தார். கொரோனாவை காரணம் காட்டி கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்க செயல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.