வேளாண் சட்டத்தை கண்டித்து விஜய்வசந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்

 

வேளாண் சட்டத்தை கண்டித்து விஜய்வசந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்வசந்த்,ரஜினி அரசியலுக்கு வருவது என்றால், முன்பே வந்திருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், தற்போது எழுந்த பிரச்சினை அவரை அரசியலுக்கு அழைத்துவரும் சூழ்ச்சியா? அல்லது அரசியலுக்கு வரவிடாமல் செய்யும் சூழ்ச்சியா? என்பது புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வேளாண் சட்டத்தை கண்டித்து விஜய்வசந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்