விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-ல் வெளியீடு?
திரையரங்குகள் திறக்கப்படாததால் ஓடிடி-யில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட படக்குழு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இதையடுத்து கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் தியேட்டர்கள் திறப்பு என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனால் ரிலீசுக்கு தயாரான பல படங்கள் கிடப்பில் போடப்பட்டன. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் நஷ்டத்தை தவிர்க்க ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய் அமேசான் பிரைமில் மாஸ்டர் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்த வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.