தனது பிறந்த நாளையொட்டி கிராமங்களில் சுகாதாரப் பணி… தே.மு.தி.க-வினருக்கு விஜயகாந்த் உத்தரவு!

 

தனது பிறந்த நாளையொட்டி கிராமங்களில் சுகாதாரப் பணி… தே.மு.தி.க-வினருக்கு விஜயகாந்த் உத்தரவு!

தன்னுடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருவதால், இந்த ஆண்டு கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தே.மு.தி.க-வினருக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 24) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2005ம் ஆண்டு தே.மு.தி.க தொடங்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ம் தேதி எனது பிறந்த நாளை, வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகிறேன். தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியைப் பின்பற்றி அவர்களால் முடிந்த அளவு மக்களுக்கான பல்வேறு உதவிகளை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர்.

தனது பிறந்த நாளையொட்டி கிராமங்களில் சுகாதாரப் பணி… தே.மு.தி.க-வினருக்கு விஜயகாந்த் உத்தரவு!


இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை பல ஆயிரம் உயிர்களை இழந்துள்ளோம். கொரோனா ஊரடங்கால் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல இந்த ஆண்டு எனது பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

தனது பிறந்த நாளையொட்டி கிராமங்களில் சுகாதாரப் பணி… தே.மு.தி.க-வினருக்கு விஜயகாந்த் உத்தரவு!


தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் இந்த முறை சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கிராமப்புற சுகாதார திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒரு ஒன்றியத்தில் முன்மாதிரியாக ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்த வேண்டும். தெருக்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் கபசுரக் குடிநீர், முகக் கவசம், கையுறை, சோப்பு, சானிடைசர் வழங்குவது, ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள், மாணவ,

தனது பிறந்த நாளையொட்டி கிராமங்களில் சுகாதாரப் பணி… தே.மு.தி.க-வினருக்கு விஜயகாந்த் உத்தரவு!

மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்க வேண்டும். குடியிருப்புகள், சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவது, விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசுவது, கொரோனா மருத்துவ உபகரணங்களை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த ஆண்டும் எனது பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.