நலமுடன் உள்ளார் விஜயகாந்த் – தேமுதிக தலைமை கழகம்

 

நலமுடன் உள்ளார் விஜயகாந்த்  – தேமுதிக தலைமை கழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து தெரியாமல் தேமுதிக தொண்டர்கள் கலக்கத்தில் இருந்தனர்.

நலமுடன் உள்ளார் விஜயகாந்த்  – தேமுதிக தலைமை கழகம்

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் நலமுடன் உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

நலமுடன் உள்ளார் விஜயகாந்த்  - தேமுதிக தலைமை கழகம்

அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு லேசான அறிகுறி தென்பட்டது. இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.