எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் வசந்த் கோரிக்கை!

 

எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் வசந்த் கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் அரசு உடனடியாக தடுப்பூசி மருந்துகளை அனுப்ப வேண்டும் என்று விஜய் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் வசந்த் கோரிக்கை!

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத் தேர்தல் வேட்பாளருமான விஜய் வசந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரையிலும் மாவட்டத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்டத்தில் தடுப்புசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ,தடுப்பூசி மருந்து இல்லாததால் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி போடும் மையங்கள் மூடப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் வசந்த் கோரிக்கை!

தடுப்பூசி போடுவதற்காக மக்கள் இந்த மையங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது . மேலும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக பூட்டிய மையம் முன்பு பொதுமக்கள் காத்து கிடக்கிறார்கள். எனவே மாவட்டத்தில் தடுப்பூசி மருந்து இல்லாததால் மக்கள் அச்சத்தில் மேலும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.