பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ரூ.50000 நிதியுதவி

 

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ரூ.50000 நிதியுதவி

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 50 ஆயிரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ரூ.50000 நிதியுதவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் 5 லட்ச ரூபாய் நிதி அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 5 லட்ச ரூபாயும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஒரு லட்சம் ரூபாயும், தேமுதிக சார்பாக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டிருந்தது. இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு நீதியை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.