ஆசி வழங்கிய விபூதி சித்தர் : முதல்வர் கனவில் துரைமுருகன்; குழப்பத்தில் திமுகவினர்!

 

ஆசி வழங்கிய விபூதி சித்தர் : முதல்வர் கனவில்  துரைமுருகன்; குழப்பத்தில் திமுகவினர்!

திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு பிறகு திமுக கட்சியின் பொதுச்செயலாளராக அரியணை ஏறியுள்ளார் துரைமுருகன், அடிமட்ட தொண்டனிலிருந்து 9 முறை எம்எல்ஏ , 3 முறை அமைச்சர், தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக முக்கிய பொறுப்பை சுமந்திருக்கும் துரைமுருகன் தமிழகத்தின் உச்சபதவியில் அமருவார் என்ற செய்தி கூடுதல் மகிழ்ச்சியை அவருக்கு தந்துள்ளது

ஆசி வழங்கிய விபூதி சித்தர் : முதல்வர் கனவில்  துரைமுருகன்; குழப்பத்தில் திமுகவினர்!

இந்த ஆரூடத்தை சொன்னவர் மகாதேவ மலையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ மஹாமஹா ஆனந்த சித்தர் என்று சொல்லப்படும் விபூதி சித்தர் தானாம். காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள மகாதேவ மலைக்கு தனது மகனுடன் சென்ற துரைமுருகனை விபூதி சித்தர் ஆளுயர மாலை அணிவித்து தடபுடலாக வரவேற்றுள்ளார்.

ஆசி வழங்கிய விபூதி சித்தர் : முதல்வர் கனவில்  துரைமுருகன்; குழப்பத்தில் திமுகவினர்!

மகன் கதிர் ஆனந்த் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவார் என்று விபூதி சித்தர் கூறியதாகவும், அதேபோல் கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன் பதிவு வகிப்பார் என்று கூறியதாகவும் சொல்லப்படும் நிலையில், அது இரண்டுமே நடந்து முடிந்ததால் விபூதி சித்தரை சந்தித்து ஆசி பெற மகனுடன் சென்றுள்ளார் துரைமுருகன். அப்போது தான் சித்தர் துரைமுருகனை பார்த்து தமிழகத்தின் உச்சபதவியில் அமர்வாய் என்று துரைமுருகனுக்கு ஆசி கூறி வழியனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

ஆசி வழங்கிய விபூதி சித்தர் : முதல்வர் கனவில்  துரைமுருகன்; குழப்பத்தில் திமுகவினர்!

இதையறிந்த திமுக தொண்டர்கள் தமிழகத்தின் உச்சபதவி என்றால் அது முதல்வர் பதிவு தான். ஒருவேளை ஸ்டாலினுக்கு போட்டியாவாரா என்று குழப்பத்தில் உள்ளனர்.