‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’.. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விஜயகாந்த் கண்டனம்!

 

‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’.. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விஜயகாந்த் கண்டனம்!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. தற்போது ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் இன்று காலை அறிவித்தார். இந்த அறிவிப்பு மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’.. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விஜயகாந்த் கண்டனம்!

இந்த நிலையில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அ’ரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.அண்டை மாநிலமான தெலுங்கானா, ஐகோர்ட் கண்டணம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்துசெய்திருப்பதை தேமுதிக வன்மையாகக்கண்டிக்கிறது.

இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். ‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள் ஏற்பாடுசெய்த பிறகு, காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.