துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வருகை!

 

துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வருகை!

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 15 நாள் பயணமாக துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்த வெங்கைய நாயுடுவிற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வருகை!

15 நாள் பயணமாக சென்னை வந்துள்ள வெங்கய்ய நாயுடு நாளை மறுதினம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஜல் பிரதிக்யா திவாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். 20 தேதி காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார். 21 தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் லால்பகதூர் சாஸ்திரி விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21 ஆம் தேதி சென்னைவருகிறார். இருவரும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.