வேலூர்- வீடு புகுந்து ஆடு திருடிய மர்மநபர்கள் – சிசிடிவி பதிவு வெளியீடு
Oct 12, 2020, 13:45 IST1602490553000
வேலூர்
வேலூர் அருகே மர்மநபர்கள் அதிகாலையில் வீடு புகுந்து கால்நடைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியில் வீடுகளில், மர்மநபர்கள் அடிக்கடி
கால்நடைகளை திருடி செல்வதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க கால்நடை வளர்ப்போர் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை
சேர்ந்த பிரபு என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் புகுந்த 3 பேர், அங்கிருந்த ஆட்டை திருடி சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.