வேலூர்- தந்தை-மகள் கொடூரமாக கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

 

வேலூர்- தந்தை-மகள் கொடூரமாக கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

வேலூர்

வேலூர், ஒடுக்கத்தூர் அருகே தந்தை மகளை கொடூரமாக கொலை செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்- தந்தை-மகள் கொடூரமாக கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ளது ரங்கன் கொட்டாய் கிராமம். அங்கு அன்ஷர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில், அணைக்கட்டு ஜார்த்தான்கொல்லை பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (42) என்பவர் காவல் வேலை செய்து வருகிறார். அவருடன் அவரது 10 வயது மகள் தீபா என்பவரும் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை தோட்டத்துக்கு வந்தவர்கள், பொன்னுசாமி, அவரது மகள் தீபா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்துள்ளனர். கழுத்து மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

வேலூர்- தந்தை-மகள் கொடூரமாக கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார், கூடுதல் கண்காணிப்பாளர் ஜான் ஆகியோர் வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கான காரணம் என்ன ? கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.