வேலூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் 161 பேருக்கு பாதிப்பு

 

வேலூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் 161 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,790 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 059பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

வேலூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் 161 பேருக்கு பாதிப்பு

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,880 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதிக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை தற்போது கணிசமாக 50 குறைந்துள்ளது. வேலூரில் இதுவரை 7,300க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திருப்பிய நிலையில், 121 பேர் உயிரிழந்துள்ளனர்.