கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!

 

கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!

திருவாரூர்

திருவாரூர் அருகே கடன் தொல்லையால் வெல்டிங் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த குளிக்கரை பகுதியை சேர்ந்தவர் நேரு(33). வெல்டிங் பட்டரையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே நேரு, சுயஉதவி குழுவில் 50 ஆயிரம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் முறையாக தவணை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் வேலை சரிவர இல்லாததால் கடந்த சில மாதங்களாக தவணை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!

இதனையடுத்து, கடன் கொடுத்த நிறுவனத்தினர் பணத்தை கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நேரு, நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரச மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேரு உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.