வேளச்சேரி வாக்குப்பதிவில் எதிரொலித்த விவேக் மரணம்!

 

வேளச்சேரி வாக்குப்பதிவில் எதிரொலித்த விவேக் மரணம்!

தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிளுக்கும் கடந்த 6-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சூழலில் வேளச்சேரி தொகுதியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு வி.வி.பாட் எந்திரமும் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் 92வது வாக்குச்சாவடி மையத்தில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரத்தில் 15வாக்குகள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வேளச்சேரி 92வது எண் கொண்ட பூத்தில் மீண்டும் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

வேளச்சேரி வாக்குப்பதிவில் எதிரொலித்த விவேக் மரணம்!

இந்நிலையில் சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று இரவு 7.30 மணியளவில் நிறைவு பெற்றது. ஏப்ரல் 6ம் தேதி இந்த வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 வாக்குகள் மட்டுமே பதிவானது. வேளச்சேரியில் 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைகழகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.