போலீசாரின் தடுப்புக் காவலை மீறி வெற்றிவேல் யாத்திரை – தடுப்புகளை மீறிச் செல்லும் எல்.முருகன்!

 

போலீசாரின் தடுப்புக் காவலை மீறி வெற்றிவேல் யாத்திரை – தடுப்புகளை மீறிச் செல்லும் எல்.முருகன்!

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், போலீசாரின் தடையை மீறி பாஜகவின் தமிழக தலைவர் வேல்முருகன் திறந்த வேனில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கோயம்பேட்டில் இருந்து யாத்திடை தொடங்கியதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீசாரின் தடுப்புக் காவலை மீறி வெற்றிவேல் யாத்திரை – தடுப்புகளை மீறிச் செல்லும் எல்.முருகன்!

கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி வழியாக வந்த வெற்றிவேல் யாத்திரை, பூந்தமல்லி – திருமழிசை கூட்டு சாலையில் திரும்பும்போது கைது செய்வதற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இரும்பு தடுப்புகள் அமைத்து இருந்தனர். பாஜகவினர் அந்த தடுப்புகளை மீறி வெற்றிவேல் கோஷமிட்டபடி அங்கிருந்து சென்றனர்.

போலீசாரின் தடுப்புக் காவலை மீறி வெற்றிவேல் யாத்திரை – தடுப்புகளை மீறிச் செல்லும் எல்.முருகன்!

இதில் வெற்றிவேல் யாத்திரைக்கு பாஜக தலைவர் முருகனோடு சேர்த்து 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனை பின்தொடர்ந்து வந்த பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. . இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசாரின் தடுப்புக் காவலை மீறி வெற்றிவேல் யாத்திரை – தடுப்புகளை மீறிச் செல்லும் எல்.முருகன்!

இதனைத் தொடர்ந்து போலீசாரின் தடுப்புக் காவலை மீறி பாஜக யாத்திரை ஆனது சென்று கொண்டிருக்கிறது. தான் சாமி கும்பிடுவதற்கு மட்டுமே செல்வதாக கூறி பாஜக தலைவர் முருகனை போலீசார் அனுமதித்தனர். திருத்தணியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு யாத்திரையை தொடங்கினால் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.