“ராமதாஸ் மீது வழக்கு தொடர்வோம்” – திருமாவளவன் எச்சரிக்கை!

 

“ராமதாஸ் மீது வழக்கு தொடர்வோம்” – திருமாவளவன் எச்சரிக்கை!

அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலைக்கு எதிரான கருத்தரங்கங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். கருத்தரங்கை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலைத் தொடர்ந்து நடந்த அரக்கோணம் இரட்டைக் கொலை சாதி வெறியர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் காவல் துறை ஒரு பக்க சார்பாகச் செயல்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

“ராமதாஸ் மீது வழக்கு தொடர்வோம்” – திருமாவளவன் எச்சரிக்கை!

பாமக சாதியக் கொடுமைகளைக் கூர்தீட்டுவதிலேயே குறியாக இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை ராமதாஸ் திசை திருப்பி பேசி வருகிறார். சரஸ்வதி என்ற பெண் கொலையை ராமதாஸ் திசை திருப்புகிறார். விசிக மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். சரஸ்வதி படுகொலைக்கும், விசிகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எங்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பினால் சகித்துக் கொள்ள மாட்டோம். இதை சட்டரீதியாக எதிர் கொள்வோம்” என்றார்.