“அப்பாவி பாமக தொண்டர்களே…ராமதாஸ் முகத்தை பாருங்கள் மோடி தெரிவார்” : திருமாவளவன் பேச்சு!!

 

“அப்பாவி பாமக தொண்டர்களே…ராமதாஸ் முகத்தை பாருங்கள் மோடி தெரிவார்” : திருமாவளவன் பேச்சு!!

பாமகவுக்கு போடும் ஒவ்வொரு வைக்கவும் மோடிக்கு தான் வலிமை தரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“அப்பாவி பாமக தொண்டர்களே…ராமதாஸ் முகத்தை பாருங்கள் மோடி தெரிவார்” : திருமாவளவன் பேச்சு!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் , “இப்போது இருக்கிற அதிமுக எம்ஜிஆர் காலத்து அதிமுக இல்லை; ஜெயலலிதா காலத்து அதிமுகவும் இல்லை; இது எடப்பாடி காலத்து அதிமுக. பாஜகவின் பினாமியாக அதிமுக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதிமுகவுக்கும் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு போடுவதற்கு சமம். அதேபோல் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்கின்ற பாமகவின் சின்னம் மாம்பழம் இல்லை. அது பாரதிய ஜனதாவின் தாமரை சின்னம் தான்.

“அப்பாவி பாமக தொண்டர்களே…ராமதாஸ் முகத்தை பாருங்கள் மோடி தெரிவார்” : திருமாவளவன் பேச்சு!!

பாமகவின் அப்பாவி தொண்டர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். பாமகவுக்கு ஓட்டு போடுவதாக நினைத்து நீங்கள் மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட்டால் நீங்கள் ஏமாறுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். பாமக தற்போது பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது. பாமகவுக்கு நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வலிமை தருமே தவிர உங்கள் கட்சிக்கும், உங்களுக்கும் வலிமை தராது. தமிழகத்தில் பாஜகவின் சின்னம் தாமரை மட்டுமல்ல இன்னும் 2 சின்னங்கள் இருக்கிறது. அதில் ஒன்று இரட்டை இலை, மற்றொன்று மாம்பழம்” என்றார்.

“அப்பாவி பாமக தொண்டர்களே…ராமதாஸ் முகத்தை பாருங்கள் மோடி தெரிவார்” : திருமாவளவன் பேச்சு!!

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக தமிழகத்தில் மூன்று முகங்களாக களத்தில் இறங்கியுள்ளது. ராமதாஸ் முகத்தை உற்றுப்பாருங்கள் மோடி தெரிவார். பழனிசாமி முகத்தில் மோடி முகம் தெரியும். 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன் என்று மோடி தெரிவித்திருக்கிறார். அப்படி என்றால் என்ன பொருள் என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்