இந்திய அணியின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ரய்ஜி 100 வயதில் காலமானார்

 

இந்திய அணியின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ரய்ஜி 100 வயதில் காலமானார்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ரய்ஜி காலமானார்.

இந்தியாவின் பழமையான முதல் தர கிரிக்கெட் வீரராக இருந்து வந்த வசந்த் ரய்ஜி 100 வயதில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இன்று அதிகாலை 2.20 மணியளவில் தெற்கு மும்பையில் உள்ள வால்கேஷ்வரில் உள்ள தனது வீட்டில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இதனை ரய்ஜியின் மருமகன் சுதர்ஷன் நானாவதி தெரிவித்தார்.

வலது கை பேட்ஸ்மேனான ரய்ஜி 1940-களில் ஒன்பது முதல் தர போட்டிகளில் விளையாடினார். அவர் 277 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ரன் 68 ஆகும். 1939-இல் நாக்பூரில் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அணிக்காக வசந்த் ரய்ஜி அறிமுகமானார். இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வசந்த் ரய்ஜி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.