“வாழ்க்கையை வழிநடத்த விவேக் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” – கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி உருக்கம்!

 

“வாழ்க்கையை வழிநடத்த விவேக்  ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” – கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி உருக்கம்!

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சவை நடிகர், கவிஞர், எழுத்தாளர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் விவேக்(59). திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். அப்துல் கலாமின் தீவிர ஆதரவாளராக விவேக் தன் வாழ்நாளில் 1 கோடி மரக்கன்றுகள் நடுவேன் என்ற லட்சியத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

“வாழ்க்கையை வழிநடத்த விவேக்  ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” – கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி உருக்கம்!

ஆனால் அவரை 33.23 லட்சம் மரக்கன்றுகள் நட்டியிருந்தபோதே காலம் எனும் கொடிய நோய் அழைத்துச் சென்றுவிட்டது. அவரின் மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் உருக்கமான இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அந்த ட்வீட்டில், “ஹரியும் சிவனும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு – விவேக். விவேக் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நகைச்சுவை, மரக்கன்றுகள் நடுவது என அவர் இந்தச் சமுதாயத்திற்குச் செய்த தொண்டு ஏராளம். வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த விவேக் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் ஆன்மா அமைதியாக இளைப்பாறட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.