“ஸ்டாலின் தங்கியிருந்த அறையில் ரெய்டு… பாஜகவுடன் எடப்பாடி கூட்டுச்சதி”

 

“ஸ்டாலின் தங்கியிருந்த அறையில் ரெய்டு… பாஜகவுடன் எடப்பாடி கூட்டுச்சதி”

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்னர். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய எ.வ.வேலு வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வந்த புகாரின்பேரில் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இதற்குக் கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“ஸ்டாலின் தங்கியிருந்த அறையில் ரெய்டு… பாஜகவுடன் எடப்பாடி கூட்டுச்சதி”

அந்த அறிக்கையில், “மத்திய பாஜக அரசு தனது அரசியல் ஆதாயத்துக்காக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செய்து வரும் அதே மிரட்டல், அதிகார அத்துமீறலைத் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றி இருக்கிறது. அரசியல் களத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான மக்கள் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டிப் பார்க்கிறது.

“ஸ்டாலின் தங்கியிருந்த அறையில் ரெய்டு… பாஜகவுடன் எடப்பாடி கூட்டுச்சதி”

திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கின்ற நிலையில் அவர் தங்கி இருந்த அறை உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திருவண்ணாமலை எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்துக்குரியது. மத்திய பாஜக அரசின் இத்தகைய மிரட்டல்களால் ஒருபோதும் திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது; எடப்பாடி பழனிசாமி அரசு மற்றும் பாஜக ஆட்சியாளர்களின் கூட்டுச்சதி தூள் தூளாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.